கோவை, ஆக. 22:கோவையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 1969-ம் ஆண்டில் பட்டம் பெற்ற முன்னாள மாணவர்களின் 50-ம் ஆண்டு பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பொன்விழா குழு தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். கல்லூரி தலைவர் கண்ணப்பன், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதையடுத்து பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, 1969-ம் ஆண்டு பணியாற்றிய பேராசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் முன்னாள் மாணவர்கள் 85 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கல்லூரி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் கொண்டனர்.