அன்னூர்,ஆக.22: அன்னூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் மாறுதல் செய்யாமல் வாய்க்கால் வழியாகவே தண்ணீரை கொண்டு வர வேண்டும், குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தை கைவிட வேண்டும் பணிகளை விரைவில் துவங்கி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக அரசு தற்போது அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம் எனக்கூறி குழாய்கள் மூலமாக கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் அறிவித்துள்ளது.இதனால் அந்தந்த குட்டைகளுக்கு மட்டுமே தண்ணீர் செல்லும் நிலை உள்ளது.
இத்திட்டத்தால் வழியோர பகுதிகளில் இன்றளவும் பாதிப்புக்குள்ளான நீர் தட்டுப்பாடு தொடரும்.