சேலம், ஆக.22: சேலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து 18,348 மனுக்களை பெற்றுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18ம் தேதி சேலம் வந்தார். முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்த அவர், பொதுமக்களிடம் இருந்து 2 நாட்களாக மனுக்களை பெற்றார். முதல்நாள் சேலம் மாவட்டம் வனவாசி, எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளிலும், நேற்றுமுன்தினம் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, ஏத்தாப்பூர் ஆகிய இடங்களிலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முதல்நாள் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை அவரே பெற்றார்.