×

பாம்பு கடித்து விவசாயி பலி

கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரி அடுத்த பாகலூர் அருகேயுள்ள எம்.தட்டகானபள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரபாகரன்(37). இவர், நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதனால், வலி தாங்க முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரபாகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்