×

டிரைவரை கத்தியால் குத்திய நண்பருக்கு வலை

கிருஷ்ணகிரி, ஆக.22: குருபரபள்ளி சாமந்திமலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(34). லாரி டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான அருண்(21) என்பவருடன், நேற்று முன்தினம் குந்தாரபள்ளி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்தவுடன் அருண், கார்த்திக்கை பணம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அருண், அங்கிருந்த கத்தியை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த கார்த்திக்கை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த குருபரபள்ளி போலீசார், அருண் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு