×

சூளகிரி சுற்றுப்பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்

சூளகிரி, ஆக.22:  சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சூளகிரி அண்ணாநகர், கோட்டை தெரு, காமராஜர் காலனி, கீழ் தெரு, முஸ்லிம் தெரு, கிருஷ்ணகிரி-ஓசூர் சாலை, சூளகிரி-பேரிகை சாலை, விஐபி நகர், கமலா காலனி, வாணியர் தெரு, நெசவாளர் தெரு, கேகே நகர், டேம் ேராடு, டிகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் சுமார் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை சாப்பிட்டும், அச்சுறுத்தியும் வருவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வீட்டின் கதவு, ஜன்னல்கள் வழியாக உள்ளே வரும் குரங்குகள்  உணவுப்பொருட்களையும், காய்கறிகளையும் திருடி செல்கிறது. அவற்றை விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது. இதனால், 24 மணி நேரமும் வீடு, ஜன்னல்களை பூட்டியே வைத்திருக்கிறோம். மேலும், தோட்டங்களுக்குள் புகுந்து செடி, கொடிகளை பிடுங்கி சேதப்படுத்துகிறது. நாளுக்குநாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனத்திற்குள் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு