×

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

அரவக்குறிச்சி,ஆக.22: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்தனர். இதில் 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அரவக்குறிச்சி பள்ளபட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து .பள்ளபட்டியில் பஸ் நிலையம், கடைவீதி, திண்டுக்கல் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் 24 கடைகளை ஆய்வு செய்தனர். இதில் 8 கடைகளிலிருந்து 4 கிலோ 100 கிராம் அளவுள்ள தடை செய்யப் பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, வட்ட அலுவர்கள் சதீஷ்வரன், பாஸ்கர், மதுரை வீரன், சுரேஷ் ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...