×

தங்க சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை

கரூர்,ஆக.22: பைக்கில் சென்ற தம்பதியிடம், மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி(66). விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை தனது மனைவியுடன் பைக்கில் புலியூர் சென்றார். புலியூர் சிமெண்ட் பேக்டரி அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், கந்தசாமி மனைவியின் கழுத்தில் கிடந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். செயினை பறிக்க முயன்ற போது, பைக்கில் சென்ற தம்பதியினர் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இது குறித்து கந்தசாமி புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு