×

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூர்,ஆக.22: கரூர் இபி காலனி பகுதியில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி வளாக பகுதிக்கு செல்லும் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட இபி காலனி பகுதியில் இருந்து நெருக்கமாக அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளின் வழியாக அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, குண்டும் குழியுமாக மிகவும் சிதிலமடைந்த நிலையில் இந்த சாலை உள்ளதால், இந்த சாலையை சுற்றிலும் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையின் மோசமான தன்மை காரணமாக, மழைக்காலங்களில் இந்த சாலையில் அதிகளவு தண்ணீர் தேக்கம் காரணமாகவும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. மோசமான நிலையில் உள்ள இந்த சாலையை சுற்றிலும் வசிக்கும் மக்கள் நலன் கருதி, இந்த சாலையின் தரத்தை மேம்படுத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா