நெல்லை, ஆக. 22: நெல்லை மாவட்டத்தில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் மூலம் நேரடியாக சென்று மனுக்கள் பெறும் பணி இன்று முதல் தொடங்குகிறது.இதுகுறித்து கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் எனும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகள் அளவிலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு நேரடியாக சென்று மனுக்களை பெறும் பணி இன்று (22ம் தேதி) முதல் துவக்கப்பட உள்ளது.