அம்பை, ஆக. 22: அம்பை வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் தாத்தா -பாட்டிகள் தின விழா கொண்டாடப்பட்டது. வேல்ஸ் வித்யாலயா கல்வி குழுமங்களின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். தாளாளர் வீரவேல் முருகன், இயக்குநர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யுகேஜி மாணவர் லக்ஷன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அரசின் அதீத துணிவு விருது பெற்ற தம்பதி சண்முகவேல் - செந்தாமரை ஆகியோர் பங்கேற்றனர். தற்காப்பு விழிப்புணர்வு குறித்து சண்முகவேல் பேசினார். தொடர்ந்து தாத்தா - பாட்டிகளுக்கு கத்தரிக்காய் சேகரித்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.