×

பழுதடைந்த வேளாண் துறை கட்டிடம்

திருக்கோவிலூர், ஆக. 22: திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டையில் வேளாண்மை துறை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த 20 வருடத்திற்கு முன் கட்டப்பட்ட கட்டிடத்தில் நெல், உளுந்து, சோளம் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட விதைகள் வைக்கப்பட்டுள்ளது.  ஆனால் கடந்த இரண்டு வருடமாக கட்டிடம் முற்றிலும் பழுதடைந்து கான்கிரீட்டுகள் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதனால் மழை காலங்களில் விதைகளை பாதுகாப்பாக வைக்க முடிவதில்லை. மேலும் வேளாண்மை அலுவலகமும் பழுதடைந்துள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் பழுதடைந்த நிலையில் உளள கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை