×

பாகூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாகூர், ஆக. 22:  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதுவை மாநிலத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வாரி பராமரிப்பு செய்ய வேண்டும், பாசிக் நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுத்து இடுபொருள் விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும், விதை நெல்லை தனியார் கம்பெனி மூலமாக விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி
யுறுத்தி பாகூர் தாசில்தார் அலுவலகம் அருகே விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தாமோதரன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் கீதநாதன் கண்டன உரையாற்றினார். மாசிலாமணி, ரவி, ராஜா, கலியமூர்த்தி, பெருமாள், அமுதா, ஆறுமுகம், மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 பெண்கள் உள்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...