வேலூர், ஆக.22:அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் 2ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறாத பிற மொழி ஆசிரியர்களின் பட்டியலை அனுப்பும்படி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தமிழ்மொழி பயிலாதவர்களும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். தமிழ்மொழி தேர்வை எழுதாமல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி பேசுவது, எழுதுவது தொடர்பாக தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: