×

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

முத்துப்பேட்டை, ஆக.22: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் அரமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மனைவி விஜயலட்சுமி(65) மூதாட்டியான இவர், உறவினர் வீட்டுக்கு செல்ல அரமங்காட்டிலிருந்து தனியார் பேரூந்தில் முத்துப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். பேருந்து முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6பவுன் தங்க செயினை ஒரு பெண் பறித்துள்ளார். அப்போது மூதாட்டி கூச்சலிட்டார். இதையடுத்து பயணிகள் நகையை பறித்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து முத்துப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் மூதாட்டி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் விசாரித்தனர், இதில் அந்த பெண், திருச்சி சமயபுரத்தை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரது மனைவி மேரி(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து நகையை பறிமுதல் செய்த போலீசார் மேரியை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு