×

குண்டும், குழியுமான கீழநம்மங்குறிச்சி சாலை மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி

முத்துப்பேட்டை, ஆக.22: குண்டும், குழியுமான கீழநம்மங்குறிச்சி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் பைபாஸ் சாலையிலிருந்து கீழநம்மங்குறிச்சியை கடந்து பெத்தவேளாண்கோட்டகம் வரையிலான சாலை என்பது இப்பகுதி மக்களுக்கு ஒரு முக்கிய சாலையாகும். இவ்வழியாக இப்பகுதிகளுக்கு மட்டுமின்றி தஞ்சை மாவட்டம், மதுக்கூர் சிரமேல்குடி, தஞ்சாவூர் போன்ற பகுதிக்கு செல்லும் மக்களும் பயன்படுத்தி வரும் ஒரு சாலையாகும். இதில் கோவிலூர் பைபாஸ் சாலையிலிருந்து கீழநம்மங்குறிச்சி வரை உள்ள சுமார் 3.2கிமீ. சாலை தற்பொழுது குண்டும் குழியுமாக உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் 4 முறை அரசு பேருந்தும், 4 முறை தனியார் மினி பேருந்தும் சென்று வருகிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சுமார் 7வருடமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி வாகனங்கள் மற்றும் அவசரக்காலத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை செல்ல இயலாத சூழ்நிலைக்கு உள்ளன. இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் இந்த சேதமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் இந்த சாலையால் அதிருப்திடைந்த இப்பகுதி மக்கள் சுமார்100க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி இது குறித்து உயர்அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதுநாள்வரை இந்த சாலையை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது சில தினங்களாக பெய்து வரும் மழைக்கு மழைநீர் சாலையின் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்இதுகுறித்து இளைஞர்பெருமன்ற நிர்வாகி சிவசந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்மீனாட்சிசுந்தரம் ஆகியோர்கூறுகையில். உடனடியாக சாலையை செப்பனிட்டு சீரமைத்து தரவேண்டும் இல்லையேல் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு