×

வழக்கறிஞர் போராட்டக்குழு தீர்மானம் மருத்துவ கழிவுகளை கையாளும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெறாவிட்டால் கடும் நடவடிக்கை

நாகை, ஆக.22: நாகை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளதாவது:சுற்றுசூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டபடி அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கால்நடை ஆஸ்பத்திரிகள், விலங்கினங்களின் சோதனைக் கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்தவங்கிகள், ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆஸ்பத்திரிகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், தடயவியல் ஆய்வகங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் படிவம் 2ல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து படிவம் 3ல் அங்கீகாரம் பெற வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலாவதியின் தேதியானது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் வழங்கப்படும். அனைத்து நிறுவனங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர், காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் இசைவாணையும், மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தையும் உடனே விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தை பெற வேண்டும். மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை பெற தவறினால் சுற்றுச்சூழல் இழப்பீட்டுத்தொகை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...