×

மயிலாடுதுறை அருகே மணல் கொள்ளை விசாரணையை தடுத்த மின்வாரிய ஊழியர் கைது

மயிலாடுதுறை ஆக.22: மயிலாடுதுறை அருகே மணல் கொள்ளை விசாரணையை தடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பாலையூர் பகுதியில் வீரசோழனாறு செல்கிறது. அதில் ஆற்றுமணல் அடிக்கடி திருட்டுபோய் வருகிறது. மணல் திருடர்களை அவ்வப்பொழுது பிடித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். போலீசாரும், வருவாய்துறையினரும் அடிக்கடி மணல்கொள்ளை தடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பாலையூர் விஏஓ ராதாலட்சுமி மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் மணல்கொள்ளை குறித்து பாலையூர் மின்வாரியத்தை ஒட்டியுள்ள வீட்டின் கொல்லை புறத்தில் விசாரணை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் லைன்மேன் சுந்தரேசய்யா(45) என்பவர் மணல்கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்ட விஏஓவை சகட்டுமேனிக்குத் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார், இதுகுறித்த ஆடியோ மற்றும் வீடியோ பதிவை பாலையூர் காவல்நிலையத்தில் விஏஓ ராதாலட்சுமி அளித்த புகாரின்பேரில் பாலையூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து லைன்மேன் சுந்தரேசய்யாவை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...