×

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை:காதல் விவகாரமா?

பெரும்புதூர், ஆக.22: பெரும்புதூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரமா என போலீசார் விசாரிக்கின்றனர்.பெரும்புதூர் அடுத்த பென்னலூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. நேற்று காலை கல்லூரி நுழைவாயிலில் வாயில் நுரை தள்ளியபடி வாலிபர் சடலம் கிடந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அப்போது, சடலத்தின் அருகில் எலி மருந்து பாட்டில் இருந்தது. இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு அருகே  கொளத்தாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சரவணன் (30).  அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் காதல் விவகாரமா, கடன் தொல்லையா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...