×

வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவதில் பாரபட்சம் குகன்பாறை கிராம மக்கள் எஸ்பி.,யிடம் மனு

விருதுநகர், ஆக. 20:  வெம்பக்கோட்டை போலீஸ் நிலைய வழக்குப்பதிவில் பாரபட்சம் காட்டப்படுவதாக குகன்பாறை கிராம மக்கள் எ         ஸ்.பி., ராஜராஜனிடம் மனு அளித்தனர். வெம்பகோட்டை  அருகே குகன்பாறை கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் மக்கள் எஸ்பி ராஜராஜனிடம்  அளித்த மனுவில்,  குகன்பாறை கிராமத்தில் 40 அருந்ததியர் குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். கடந்த ஆக.13ல் இரவு 9 மணியளவில் மாரிமுத்து  என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து 12 பேர் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல்  நடத்தினர். இதில் மாரிமுத்துவின் உறவினர்கள் மாரிச்சாமி, சரவணகுமார்,  முனியம்மாளை தாக்கி உள்ளனர். இரவில் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில்  புகார் செய்ய சென்றபோது, மருத்துவமனைக்கு செல்லுமாறு போலீசார்  அறிவுறுத்தினர். 3 நாட்கள் கழித்து சிகிச்சையில் இருந்தவர்களிடம்  போலீசார் விசாரணைக்கு சென்றபோது, பாதிக்கப்பட்டவர்கள் 12 பேர் மீது புகார்  தெரிவித்தனர். ஆனால் வெம்பக்கோட்டை போலீசார் அடி வாங்கி காயம்பட்டவர்கள்  மீது வழக்குப்பதிவு செய்து விட்டு, எதிர்தரப்பில் 7 பேர் மீது மட்டும்  வழக்குபதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய  வேண்டும். அருந்ததியர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென  தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...