விருதுநகர், ஆக. 20: வெம்பக்கோட்டை போலீஸ் நிலைய வழக்குப்பதிவில் பாரபட்சம் காட்டப்படுவதாக குகன்பாறை கிராம மக்கள் எ ஸ்.பி., ராஜராஜனிடம் மனு அளித்தனர். வெம்பகோட்டை அருகே குகன்பாறை கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் மக்கள் எஸ்பி ராஜராஜனிடம் அளித்த மனுவில், குகன்பாறை கிராமத்தில் 40 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆக.13ல் இரவு 9 மணியளவில் மாரிமுத்து என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து 12 பேர் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் மாரிமுத்துவின் உறவினர்கள் மாரிச்சாமி, சரவணகுமார், முனியம்மாளை தாக்கி உள்ளனர். இரவில் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய சென்றபோது, மருத்துவமனைக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். 3 நாட்கள் கழித்து சிகிச்சையில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணைக்கு சென்றபோது, பாதிக்கப்பட்டவர்கள் 12 பேர் மீது புகார் தெரிவித்தனர். ஆனால் வெம்பக்கோட்டை போலீசார் அடி வாங்கி காயம்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விட்டு, எதிர்தரப்பில் 7 பேர் மீது மட்டும் வழக்குபதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அருந்ததியர் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.