×

பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

சிவகாசி, ஆக. 20: தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தால் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்கள் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான 40வது தொகுதி ஒரு மாத கால இலவச பாதுகாப்பு பயிற்சி வகுப்பு சிவகாசி தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விப்பமுள்ளவர்கள் செப்.4ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பட்டாசு ஆலையில் பணிபுரியும் போர்மேன்கள், மேற்பார்வையாளர்கள் தரத்தில் ஒரு ஆலைக்கு குறைந்தது இரண்டு நபர்கள் வரை பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். இத்தகவலை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் தெரிவித்துள்ளா்

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...