திருச்சுழி, ஆக. 20: நரிக்குடி அருகே புதிய கலையரங்கத்தை தங்கம் தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குருவியேந்தல் கிராமத்தில் திருச்சுழி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. இக்கலையரங்கத்தை திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் செம்பொன்நெருஞ்சி சந்திரன், கமலி பாரதி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செல்லப்பா, மீனவரணி துணை அமைப்பாளர் பூமிநாதன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் இசலி ரமேஸ் உள்பட ஏராளமானோர் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கலையரங்கை திறந்து வைத்த எம்எல்ஏவை பொதுமக்கள் பாராட்டினர்.