×

மணல் திருடிய 4 பேர் கைது

பெரியகுளம், ஆக.20: பெரியகுளம் கண்மாயில் மணல் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெரியகுளம், தென்கரை போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியகுளம் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றபோது கண்மாயில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணலை ஏற்றி திருடிச் சென்று கொண்டிருந்தவர்களை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பரமசிவம்(35), ராமராஜ்(24), முருகன்(45), அய்யனார்(25) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...