×

சின்னமனூரில் அவரைக்காய் பறிக்கும் பணி தீவிரம்

சின்னமனூர், ஆக.20: சின்னமனூர் பகுதிகளில் அவரைக்காய் பறிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சின்னமனூர் பகுதிகளில் நிலத்தடிநீர் பாசனத்தின் வாயிலாக அய்யம்பட்டி, புலிக்குத்தி, தர்மத்துப்பட்டி, சங்கராபுரம், முத்தலாபுரம், சின்னஓவுலாபுரம், எரச்சக்கநாயக்கனூர், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, ஓடைப்பட்டி, சீப்பாலகோட்டை, காமாட்சிபுரம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவரை பயிரிட்டுள்ளனர். தற்போது காய்கள் பறிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இவற்றை சின்னமனூர் விற்பனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். கிலோவிற்கு 7 ரூபாய் அதிகமாக கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?