×

குடிதண்ணீர் வழங்க வேண்டும் கிராம பெண்கள் மனு

ராமநாதபுரம், ஆக.20:  ராமநாதபுரம் அருகே கீழக்கரை சின்னபாளையரேந்தல் கிராமத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு கலெக்டர் வீரராகவராவிடம் மனு அளித்தனர். மனுவில், எங்கள் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஊரணி கிணறு, போர்வெல் வறண்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அரசு 40 வீட்டுக்கு தலா 2 குடம் என்ற அளவில் தண்ணீர் வழங்கி வருகிறது. அது எங்களுக்கு போதவில்லை. ஒரு கி.மீ., தொலைவில் மெயின் ரோட்டின் அருகில் கசியும் தண்ணீரை பிடித்து உபயோகித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். ஒரு கி.மீ. தொலைவு சென்று தண்ணீர் பிடித்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் ஊரில் அகஸ்தியர் கோயில் அருகில் குடிநீர் குழாய் வைத்து தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை