×

பரமக்குடியில் கஞ்சி கலைய ஊர்வலம்

பரமக்குடி, ஆக.20:  பரமக்குடியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிக்கஞ்சி வார்ப்பு விழா நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலையம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். பரமக்குடி திருவள்ளுவர் நகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பாக உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், மனித நேயம் சிறக்கவும் மன்ற தலைவி மல்லிகா தலைமையில் ஆடிக்கஞ்சி வார்ப்பு விழா நடைபெற்றது. விழாவினை இலக்குமணன் தொடங்கி வைத்தார். அங்காள பரமேஸ்வரி கோவில் அறங்காவலர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.  இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கஞ்சி கலையம் எடுத்தும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை