தாலுகா அலுவலகம் முற்றுகை

பேரையூர், ஆக. 20: பேரையூரில் டொம்பர் சமூகமக்கள், பேரூராட்சி குப்பை கொட்டும் இடத்தில், குடிசை அமைத்து வசித்து வந்தனர். இதனால், இவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதையடுத்து, அப்போதைய பேரையூர் தாசில்தார் இளமுருகன், இந்த சமூக மக்களுக்கு, பேரூராட்சி பூங்கா பின்புறம் உள்ள மலையடிவாரத்தில், அரசு புறம்போக்கு இடத்தை ஒதுக்கி கொடுத்தார். அங்கு அவர்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கக்கோரி, தற்போதைய தாசில்தார் ஆனந்தியிடம் அச்சமூக பொதுமக்கள் மனு கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் நில அளவையர், இடத்தை அளவீடு செய்து, தெருக்களை அமைத்து திருநங்கை உட்பட 18 பேர்களுக்கு அளவுக்கல் ஊன்றப்பட்டது. ஆனால், பட்டா வழங்கப்படவில்லை.  இந்த நிலையில் பட்டா வழங்கக்கோரி, பேரையூரில் தாலுகா அலுவலகத்தை, டொம்பர் சமூக மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் ஆனந்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பட்டா வழங்க உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: