மதுரை, ஆக.20: மதுரையில் பெண்ணிடம் நகையை பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பிய 2 பேரின், சிசிடிவு பதிவுகளை வெளியிட்டு, போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சோச்சடை அசோக் நகரைச் சேர்ந்தவர் கலாவதி (44). இவர், அழகர்கோவில் மெயின்ரோட்டில் புதூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் பின் தொடர்ந்த இருவரில் ஒருவர், திடீரென கலாவதி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்த்துக் கொண்டு தப்பினர். கூச்சலிட்டும் பயனில்லை. இது குறித்து கலாவதி அளித்த புகாரின்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய வழிப்பறிக்கும்பலை தேடி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான வழிப்பறி செய்த இருவரின் படங்களை வெளியிட்டுள்ளனர்.