நல வாரிய அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு * அரசின் முடிவால் நூலகர்கள் அதிருப்தி கம்யூ. நிர்வாகி மீது வழக்கு

குஜிலியம்பாறை, ஆக. 20: குஜிலியம்பாறை அருகே சிலும்பாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). கரிக்காலி தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் தண்ணீர் எடுத்து விடும் ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் கோவிலூரை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலுபாரதி என்பவரை ஆறுமுகம் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதையறிந்த பாலுபாரதி நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலுபாரதி, ஆறுமுகத்தை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆறுமுகம் காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் பாலுபாரதி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: