திருச்சி, ஆக.20: திருச்சி மதி இந்திராகாந்தி கல்லூரி சார்பில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மின் எரிப்பான் எந்திரம், தானியங்கி நாப்கின் எந்திரம் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா தலைமை வகித்து பேசுகையில், மாணவிகள் பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் செயல்பட்டு கல்வியில் சாதனை புரிந்து சுகாதாரம் பேணி வாழ்வில் வளம் பெறுவதுடன், சமுதாயத்திற்கு தொண்டாற்றும்போது தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுதல் அவசியம் என்றார்.