சாலை விபத்தில் ஏட்டு படுகாயம்

மண்ணச்சநல்லூர், ஆக.20: சமயபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் அசோகன் (41). இவரது சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம். தற்போது சமயபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அசோகன் தனது இருசக்கர வாகனத்தில் சமயபுரத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். சமயபுரம் நாலுரோட்டை கடந்து சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அசோகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: