பரபரப்புதிருச்சி ஆக.20: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த கொடியாலம்குருவை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி பாக்கியலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினம் இறந்து விட்டார். தொடர்ந்து பாக்கியலட்சுமி மகள் ஷாலினி வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று பாக்கியலட்சுமி கீழே ரத்த காயங்களுடன் கிடந்தார். அப்பொழுது பாக்கியலட்சுமி தங்கை மகன் சுதாகர் வீட்டுக்கு வந்தார். அப்போது பெரியம்மா ரத்த வெள்ளத்தில் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜீயபுரம் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் வீட்டிலிருந்த பாக்கியலட்சுமி மருமகன் முருகன் சந்தேகத்திற்கிடமான முறையில் பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார். போலீசாரிடம் முருகன் கூறுகையில், மாமியார் பாக்கியலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு லட்சம் பணம் கொடுத்தார். அதனை வாங்கி வைத்திருந்த நிலையில் மீண்டும் அவரிடம் ஒப்படைத்தேன். ஆனால் வெளியில் எனக்காக அவரிடம் ஒரு லட்சம் பணம் கொடுத்தேன் என பொய் கூறியதால் ஆத்திரமடைந்தேன். இன்று (நேற்று) மாமியாரிடம் இது குறித்து கேள்வி கேட்டேன். அவர் முன்னுக்குப்பின் கூறியதால் ஆத்திரமடைந்து கீழே பிடித்து தள்ளினேன். இதில் கீழே விழுந்து இறந்து போனார் என்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.