திருச்சி, ஆக.20: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆர்டிஓ சாந்தியிடம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பழனிசாமி அளித்த மனுவில்,திருச்சி மாநகராட்சி ரங்கம் கோட்டம், தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அந்த பெயர் பட்டியலின்படி சுமார் 2,568 பேர் தரைக்கடை வியாபாரிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்பட்டியலில் சுமார் 2,000 பேருக்கு மேல் முகவரிகள் குறிப்பிடவில்லை. மேலும் 1,000 பேருக்கு மேல் தந்தை பெயரும் இல்லை. அதனால் இப்படியல் பெரும் சந்தேகத்துக்கு உட்பட்டுள்ளது. ஆளுங்கட்சி மற்றும் பெரு வணிக நிறுவனங்கள் போலியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளது தெரியவருகிறது.