கும்பகோணம் அருகே வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோ திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கும்பகோணம், ஆக. 20: கும்பகோணம் அருகே வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோவை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நாணயக்கார தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (48). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு லோடு ஆட்டோவை, தனது வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு வீட்டுக்கு வெளியே குணசேகரனின் மனைவி பார்த்தபோது ஆட்டோ நின்றது. காலை 7 மணியளவில் குணசேகரன் வெளியில் வந்து பார்த்தபோது லோடு ஆட்டோவை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்து கும்பகோணத்தின் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் குணசேகரன் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: