×

கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஆக. 20: கொள்ளிடத்தில் தனி மணல் குவாரி அமைக்ககோரி கும்பகோணத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கொள்ளிடம் ஆற்றில் தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகம் முன் தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். தலைவர்கள் முருகன், லட்சுமணன், செயலாளர்கள் பாஸ்கர், செந்தில், பொருளாளர் முருகன், உலகநாதன் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் லாரி, டிராக்டர், டாரஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பகிரங்கமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். பிழைப்புக்காக மணல் எடுக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது வழக்கு போடுவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது உள்ளிட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனி அடையாள அட்டையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில்...