×

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பாபநாசம், ஆக. 20: பாபநாசம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.பாபநாசம் அருகே வழுத்தூர் பகுதியில் தாசில்தார் கண்ணன் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் குடமுருட்டி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் தாசில்தார் கண்ணன் ஒப்படைத்தார்.


Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...