×

எளம்பலூர் சுடுகாட்டுக்கு நிரந்தர பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மனு

பெரம்பலூர், ஆக. 20: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் எளம்பலூர் எம்ஜிஆர் நகர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் வந்து மனு அளித்தனர்.அதில் எளம்பலூர் எம்ஜிஆர் நகர் பொதுமக்களுக்கான சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த வேளையில் அந்த பாதையில் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையை சுற்றிலும் வேலி அமைத்து நாங்கள் செல்லும் சுடுகாட்டு பாதையை மறித்து நுழைவு வாயிலில் அமைத்து கேட் போட்டனர்.இதனால் நாங்கள் எங்களது சுடுகாட்டுக்கு செல்ல வழியில்லாதால் ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்ததின்பேரில் அந்த கேட் மூடப்படாமல் இருந்தது.  எங்களுக்கு நிரந்த பாதை கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது சுடுகாட்டுக்கு செல்ல நிரந்தர பாதை அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது