×

சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

அரியலூர், ஆக. 20: சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரியலூரில் நடந்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழயிர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு சங்க ஊழியர் சங்க மாநில செயலாளர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்.

இதில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குழந்தைகளின் உணவுக்கு ரூ.9 மானியம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் சத்துணவு பணியிடத்துக்கு ஆண்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது