×

சுற்றுச்சூழல் கருத்தரங்கம்

வேதாரண்யம், ஆக.20: வேதாரண்யம் அடுத்த கடிநெல்வயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் தலைமையாசிரியர் நீலமேகம் தலைமையில் நடைபெற்றது.மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பு, கடிகை இளைஞர் மன்றம், பள்ளியின் பசுமைப்படை ஆகியவை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு செஞ்சிலுவை சங்க வட்டார செயலாளர் தர்மதுரை, நேரு யுவகேந்திரா அமைப்பின் தன்னார்வலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்கள் வடிவேலு, அமுதா, வேம்பையன், மதிவாணன், ஆனிசெயின் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...