×

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் கஞ்சிக்கலய ஊர்வலம்

கொள்ளிடம், ஆக.20:  கொள்ளிடம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் வருடந்தோறும் நடைபெறும் கஞ்சிக்கலையம் சுமக்கும் விழா நடைபெற்றது.விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள், கொள்ளிடம் ஆற்றில் புனித நீராடி பின்னர் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் உள்ள வெற்றி விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு கஞ்சிக்கலையங்களை சுமந்தபடி கொள்ளிடம் கடைவீதியின் வழியாக ஊர்வலமாக சென்று கொள்ளிடம் புலிஸ்வரி அம்மன் கோயில் அருகே உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர்.விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ஜெயராமன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரமாமணி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கஞ்சி வழங்குதலும் அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கொள்ளிடம் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் செய்திருந்தனர்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்