×

சீர்காழி கழுமலையாறு மழைக்காலம் துவங்கும் முன் தூர்வாரும் பணியை முடிக்க கோரிக்கை

சீர்காழி, ஆக.20: சீர்காழி கழுமலையாறு தூர்வாரும் பணி மற்றும் நீர்த்தேக்க மதகு கட்ட குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டை தில்லைவிடங்கன் சிவனார் விளாகம் செம்மங்குடி பகுதிகளில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மழைகாலம் துவங்க சில மாதங்களே உள்ளதால், தூர்வாரும் பணியை மழைக்காலம் தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும்.மேலும் தூர்வாரும் போது எடுக்கப்படும் மண்ணை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்த பயன்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூர்வாரும் பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் எழுப்பி உள்ளனர்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்