×

மயிலாடுதுறையை மாவட்டமாக்க கோரி வழக்கறிஞர்கள் தெருமுனை பிரசாரம்

மயிலாடுதுறை, ஆக.20: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக ஆக்கக்கோரி மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் குழுவினர் மணல்மேடு பேரூராட்சி அலுவலகம் முன்பு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.நாகை மாவட்டம் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி வர்த்தக சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் மாயுரம் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மயிலாடுறை வழக்கறிஞர்கள் அமைப்பாக சேர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் குழு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுவினர் வழக்கறிஞர் டாக்டர் ராமசேயோன் தலைமையில் மணல்மேடு பேரூராட்சி அலுவலகம் முன்பு தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இப்பிரசாரத்தில் திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்றனர். பொதுமக்களிடம் இதுகுறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சிவதாஸ், சிவச்சந்திரன் மற்றும் நடராஜன், பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...