×

கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம், பீதி

கரூர், ஆக. 20: அளவுக்கு அதிகமாக சுற்றித்திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் நகர பாஜகவினர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து அரசு காலனி செல்லும் வழியில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வரும் தெரு நாய்கள் இந்த பகுதியில் சுற்றி திரிவதோடு, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து பொதுமக்களுக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வருகிறது.

இதனால் சிறுவர், சிறுமிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் இந்த பகுதியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்