×

இரட்டை கொலை வழக்கு சரண் அடைந்த மேலும் ஒருவரிடம் 2 நாள் காவலில் போலீஸ் விசாரணை

குளித்தலை, ஆக. 20: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த முதலைப்பட்டியில் குளம் ஆக்கிரமிப்பு பிரச்னையில் கடந்த 29ம் தேதி ஆக்கிரமிப்பாளர்களால் அதே ஊரைச் சேர்ந்த வீரமலை(70), அவரது மகன் நல்லதம்பி(42) ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் இரட்டை கொலை வழக்கில் பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்ததாக திருச்சி பெரிய கொத்தமங்கலத்தை சேர்ந்த வீரமணி மகன் வினோத்(எ) ஹரிகரனை(22) போலீசார் கைது செய்து குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி முதலைப்பட்டியைச் சேர்ந்த நடராஜ்(61) என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார் அவரை குளித்தலை போலீசார் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 நாள் காவலில் விசாரிக்க அழைத்து சென்றுள்ளனர்.


Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...