×

தோகைமலை கல்லடையில் நடந்த குறை தீர்க்கும் நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தோகைமலை, ஆக. 20: தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி கீழவெளியூரில் வருவாய்துறை சார்பில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாள் நடந்தது. விஏஓ அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு சமூக திட்ட தனி தாசில்தார் புகழேந்தி தலைமை வகித்தார். தோகைமலை ஆர்ஐ நீதியரசன், கல்லடை விஏஓ கார்த்திக் ஆகியோர; முன்னிலை வகித்தனர். இதில் கல்லடை ஊராட்சிக்கு உட்பட்ட கீழவெளியூர், மேலவெளியூர், தென்நகர், காமராஜர் நகர், பாரதிநகர், கல்லடை ஆகிய கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்களிடம் முதியோர் உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு செய்து பயனாளிகளிடம் சான்றுகள் வழங்கப்பட்டது.
முகாமில் விஏஓக்கள் அண்ணாத்துரை, ராமதாஸ், உதவியாளர்கள் பாக்கியராஜ், அம்பிகாபதி, பழனிவேலு, மணிவேல், அழகன், ராஜகுமாரி, அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது