×

கரூர் மாவட்டத்தில் அமராவதி நீர் வரத்து குறைவு

கரூர், ஆக.20: கரூர் மாவட்டத்திற்கு அமராவதி நீர்வரத்து குறைந்தது.திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதத்தில் திருப்பூருக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கரூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதை விவசாயிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அமராவதி அணையில் இருந்து கடந்த 14ம் தேதி 2 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டது.நேற்று (19ம் தேதி) திறக்கப்படும் நீரின் அளவு 1000 கன அடியாக குறைக்கப்பட்டது, அமராவதி அணையின் உயரம் 90 அடி. அணையில் 71 அடிக்கு தண்ணீர் உள்ளது,. நேற்று அணைக்கு 440 கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. ஆற்றில் 1000 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது.


Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...