×

மனைவியின் முன்னாள் காதலனுக்கு கத்திக்குத்து

திருப்பூர்,ஆக.20: திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (32). பனியன் தொழிலாளி.இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த திருச்சுளையை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியர் திருப்பூர் அங்கேரிபாளையத்தை  அடுத்த வெங்கமேடு பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன் திருச்சுளை பகுதியை சேர்ந்த கேசவமூர்த்தி என்பவர் பிரகாஷ் பணிபுரிந்த பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். மனைவியின் ஊரை சேர்ந்தவர் என்பதால் பிரகாஷ் கேசவமூர்த்தியுடன் நட்புடன் பழகினார். இருவரும் ஒன்றாக மது அருந்தும் அளவிற்கு நெருக்கமாக பழகினர்.

சம்பவத்தன்று கேசவமூர்த்தி, பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் மணீஸ்குமார் ஆகிய மூவரும் டாஸ்மாக் பாரில் சென்று மது அருந்தினர். அப்போது மணீஸ்குமார் பிரகாஷிடம் உனது மனைவி கேசவமூர்த்தியின் முன்னாள் காதலி என்றும், இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் உனக்கு திருமணம் செய்து கொடுத்தனர் என்றும், இதனால் சிங்கப்பூர் சென்ற பிரகாஷ் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் உனது மனைவியுடன் பேசி வந்தார். தற்போது நீ வேலை பார்க்கும் கம்பெனியிலேயே வேலைக்கு சேர்ந்து விட்டார் எனக் கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் வாக்குவாதம் செய்த போது, வீணாக தகராறு செய்தால் உனது மனைவியை என்னுடன் அழைத்து சென்று விடுவேன் என கேசவமூர்த்தி கூறி உள்ளார். ஆத்திரமடைந்த பிரகாஷ் மனைவியின் முன்னாள் காதலனாகிய கேசவமூர்த்தியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்தனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...