உடுமலை,ஆக.20:பொள்ளாச்சியில் வெற்றி பெற்ற திமுக எம்பி., சண்முகசுந்தரம் ஒன்றியம் வாரியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று தும்பாலபட்டி, குரல்குட்டை, மடத்தூர், குருவப்பநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் நன்றி தெரிவித்தார். அவருடன் மடத்துக்குளம் திமுக எம்எல்ஏ., ஜெயராமகிருஷ்ணன், உடுமலை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் சவுந்தர்ராஜன், மார்க்சிஸ்ட் கனகராஜ், கொங்கு ரவி, தும்பாலபட்டி செல்வராஜ், லோகநாதன், தெய்வசிகாமணி, மனோகரன், பழனிசாமி, ஈஸ்வரன், போடிப்பட்டி செல்வகுமாரசாமி, ராஜா மற்றும் திமுகவினர் சென்றனர்.