×

அவிநாசியில் ரூ.2.56 கோடியில் தார் சாலை,வடிகால் அமைக்கும் பணி

அவிநாசி,ஆக.20: அவிநாசி  சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் 16வது வார்டு பகுதி முத்து செட்டி பாளையம், 18வது வார்டு காமராஜ் நகர,10வது வார்டு வி.எஸ்.வி. காலனி உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால்  பூமி பூஜையில் கலந்துகொண்டு புதிதாக தார் சாலை அமைக்கும்  பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து  பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்,  அவிநாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, சுகாதாரஆய்வாளர் கருப்பசாமி, சுகாதார மேற்பார்வையாளர் பாலதண்டாயுதபாணி, நிலவள கூட்டுறவு வங்கி தலைவர் ஜெகதீசன், கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் ஜெயபால் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா