திருப்பூர், ஆக.20:திருப்பூர், கீழ்பவானி பாசன கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது என கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து கீழ்பவானி விவசாயிகள் நல சங்கம் தலைவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கீழ்பவானி பாசனம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கீழ்பவானிப் பாசன கால்வாய் 35 மைல் பயணித்து கரூர் மாவட்டத்தில் முடிகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் இதன் மூலம் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில், சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகளை ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன கால்வாய்கள் கரைப்பதில்லை. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாசன பயனாளிகளின் எதிர்ப்பையும் மீறி பாசன கால்வாயில் சிலைகள் கரைக்கப்பட்டது.